ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த திருநங்கை நூர் ஷெகாவத்துக்கு  அங்குள்ள ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலமாக பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான பன்வர்லால் பைர்வா,  பிறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பன்வர்லால் பைர்வா, “ஆண் மற்றும் பெண் பிறப்பு சான்றிதழ்களுடன், திருநங்கைகளின் பிறப்பு சான்றிதழ்களும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும், மேலும் திருநங்கைகளும் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.