ஆந்திரா மாநிலத்தில் வலையில் சிக்கிய மீன் ஒன்று பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் இன்று அரிய வகை கச்சிடி மீன் சிக்கியுள்ளது. இந்த மீன் அரியவகை மருத்துவ குணங்கள் கொண்டது.  இதனை கரைக்கு கொண்டு வந்த மீனவர் 73 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

மேலும், இந்த கச்சிடி மீனில் இருந்து பித்தப்பை, நுரையீரல் தொடர்பான பல நோய்களுக்கு மருந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது. மேலும், 25 கிலோ எடை கொண்ட இந்த மீனை வாங்க பலரும் போட்டி போட்டுள்ளனர்.