மீண்டும் மூன்றாவது முறை மோடி ஜி பிரதமர் ஆக வருவார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்..

சென்னை திருவான்மியூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் கு.ப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம், திருச்சியில் பிரதமரை சந்தித்தது தொடர்பாக விளக்கமளித்தார்.

ஓபிஎஸ் கூறியதாவது, மரியாதை நிமித்தமாகவே பிரதமர் மோடியை சந்தித்தேன். பிரதமரை சந்தித்தபோது அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன் மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸ் விலகும் வரை யுத்தம் தொடரும். நாடாளுமன்ற தேர்தலில் அமமுக உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். நாடாளுமன்ற தேர்தலில் அமமுக, பாஜகவுடன் இணைந்து பணியாற்றும் சூழல் உள்ளது.

சசிகலாவை தரக்குறைவாக பேசி இபிஎஸ் நம்பிக்கை துரோகம் செய்தவர். காலம் வரும்போது இபிஎஸ் தொடர்பான ரகசியங்களை வெளியிடுவேன். இபிஎஸ் குறித்த ரகசியங்கள் உரியவரிடம் தெரிவிக்கப்படும். எம்ஜிஆர் வகுத்த அதிமுக விதிகளை கல்நெஞ்சம் படைத்தவர்கள் ரத்து செய்துள்ளனர். மீண்டும் மூன்றாவது முறை திரு.மோடி ஜி அவர்கள் நாட்டினுடைய பிரதமர் ஆக வருவார் என தெரிவித்துள்ளார்..