இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு ஆபத்தில் சிக்கிவிடும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார். கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய போது, ஒருவர் எந்த ஜாதி மதமாக இருந்தாலும் அவருக்கு சட்ட பாதுகாப்பு உண்டு. ஆனால் இந்த நிலைமை மாறி வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. பசுவை வைத்து மோதல்களை உருவாக்கும் பாஜக ஒரு பிரிவினரை எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கிறது. மீண்டும் BJP ஆட்சிக்கு வந்தால் நாடு ஆபத்தில் தான் சிக்கும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.