டைரக்டர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் “பார்டர்”. இந்த படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இரண்டு பேரும் நாயகிகளாக நடித்து உள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில், சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.

அதன்பின் இப்படம் கடந்த அக்,.5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் ஆகவில்லை. அதனை தொடர்ந்து பார்டர் படம் வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டுமாக படக் குழு தள்ளிவைத்துள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.