தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யாவை சென்ற 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த நிலையில் 18 வருடங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இதன்பின் இருவரும் அவர் அவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.

சென்ற வருடம் தனுஷ் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியானது. அதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. ஐஸ்வர்யா தற்போது ஆல்பம் பாடலை இயக்கி முடித்து லால் சலாம் திரைப்படத்தை இயக்குகின்றார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்கின்றார். தற்போது படத்திற்கான பணிகள் நடந்து வருகின்றது.

இந்த நிலையில் தனுஷ் போயஸ் கார்டனின் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியிருக்கின்றார். 150 கோடி செலவில் பிரம்மாண்டமாக ஹைடெக் வசதிகளுடன் கட்டியிருக்கின்றார். அந்த புதிய வீட்டுக்கு சமீபத்தில் தனது அப்பா மற்றும் அம்மாவுடன் குடியேறி இருக்கின்றார். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் பல லட்சம் செலவு செய்து ஹைடெக்காக அழகுப்படுத்தி இருக்கின்றார் தனுஷ்.

இந்த நிலையில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு கட்ட ஐஸ்வர்யா தான் காரணம் என செய்தி ஒன்று வெளியாகியிருக்கின்றது. ஐஸ்வர்யா தனது தந்தையான ரஜினிகாந்தை அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்திருக்கின்றார். இதனால் தனுஷ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு அருகிலேயே புதிய வீடு ஒன்றை கட்ட ஆரம்பித்து இருக்கின்றார். இதனிடையே இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள் குறிப்பிடத்தக்கது.