கடந்த ஒன்றாம் தேதி ஜப்பான் நாட்டில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. பல மாகாணங்களை தாக்கிய நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் பதிவானது. சுமார் 150க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 60 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஜப்பான் நாட்டின் ஹோன்ஷு தீவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 5.0 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.