உத்திரபிரதேசம் மாநிலத்தில் 70 வயதான மூதாட்டி நூர்ஜஹானின் என்பவர் வீட்டில் பல வருடங்களாக மின்சார வசதி இன்றி தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரி அனுக்ரித்தி ஷர்மா.

மேலும் காவல்துறை நிதியிலிருந்து மூதாட்டிக்கு அன்பளிப்பாக மின்விசிறியும் வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு வழங்கப்பட்ட சந்தோஷத்தில் மூதாட்டி அனைத்து காவலர்களுக்கும் இனிப்பு ஊட்டி நன்றி தெரிவித்தார்.