தமிழகத்தில் கடந்த வருடம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் போலவே புதுவையிலும் ஏப்ரல் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி மின்வாரியம் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை மின் பயனர்கள் உரிய காலத்தில் செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தாவிட்டால் மின் துண்டிப்பு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்  துடிப்பு செய்த பிறகு சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்துவது தெரிய வந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.