மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு மூதாட்டி நீண்ட நாட்களாக மின்கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்து அவருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். அந்த நேரத்தில் மூதாட்டி குளித்துக் கொண்டிருந்தார். தன் உடைமைகளை அதிகாரிகள் வாகனத்தில் ஏற்றி செல்வதை அறிந்த மூதாட்டி அரை நிர்வாண கோலத்தில் சாலையில் ஓடி வந்து வாகனத்தை நிறுத்தி தன் உடைமைகளை மீட்க முயற்சித்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து முதல்வர் சிவராஜ் சிங் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் மின்வாரிய ஊழியர்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டதற்கு முதல்வர் வெட்கப்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் விமர்சித்துள்ளார். மேலும் இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.