சென்னையில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் மின்சார கசிவு மற்றும் மின் பெயர்கள் அருந்து கிடப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க மின்சாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் 9498794987 என்ற உதவி எண்ணை 24 மணி நேரமும் அழைத்து புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.