இந்தியாவில் டாடா-நெக்ஸான் , ஹூண்டாய்-க்ரீட்டா மற்றும் கியா-செல்டோஸை விட மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா விற்பனையில் முந்தியுள்ளது. அதாவது காம்பாக்ட் எஸ்.யூ.வி செக்மென்ட்டில் ஒரு சிறந்த காராக மாறியுள்ளது. விற்பனையில் சக்கைப்போடு போடும் இந்த பிரபல எஸ்.யூ.வியை 7-சீட்டராக அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
தற்போது இது சோதனையில் உள்ளதால்  மிடில் கிளாஸ் கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.  இது 2025 ஆம் ஆண்டிற்குள் சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த மாடல்  6 – சீட்டர் மற்றும் 7-சீட்டர் விருப்பங்களை வழங்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.