மிக்ஜாம் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 118 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையை நோக்கி மிக்ஜாம் புயல் தாக்க உள்ளது. இந்தநிலையில், டிச.3 முதல் 6ம் தேதி வரை, சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடில்லி, விஜயவாடா, கயா, ஐதராபாத். அகமதாபாத், ஹவுரா, லக்னோ, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களும், அங்கிருந்து மறுமார்க்கமாக இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.