பெங்களூரில் 28 வயது பெண் ஒருவர் பிரபல மால் ஒன்றிற்கு நன் 2 படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். படம் முடிந்து வெகு நேரம் ஆகியும் அவர் மாலில் சுற்றி தெரிந்துள்ளார். சுமார் அதிகாலை 2.30 மணி அளவில் மாலை மூடும் நேரம் வரும்போது அங்கிருந்த பணியாளர்களின் கண்ணில் அந்த பெண் சிக்கி உள்ளார்.  அவர்கள் அந்த பெண்ணிடம் மாலை வீட்டு கிளம்புமாறு கூறியுள்ளனர்.

ஆனால் அவர் கேட்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் வந்து அந்த பெண்ணை மாலில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்போதும் அவர் காவல்துறையினரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.