சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்த விசாரணையின்போது, அந்த பெண் கணவரை பிரிந்து கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்த சுபலட்சுமி (33) என்பதும், இவருக்கும் கத்தாரில் வேலை பார்த்துவந்த நடராஜ் (32) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு வந்த இருவரும் கோவையில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அப்போது நடராஜின் மனைவி பெயரை மார்பில் பச்சை குத்தியது போல் தன் பெயரை கையில் பச்சை குத்த சொல்லியுள்ளார் சுபலட்சுமி. இதனையடுத்து தன் சொந்த மனைவியை சந்திக்க சென்றபோது பச்சைக்குத்தியதை அழித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்து நண்பர் உதவியுடன் ஏற்காட்டில் சூட்கேஸில் வைத்து வீசியதாக நடராஜ் தெரிவித்துள்ளார்.