திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் திருவனந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் 12623 வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதனால் அங்கமாலி, எர்ணாகுளம் டவுன், திரி புனிதிரா, கோட்டையம், செங்கன சேரி, செங்கனூர், மாவேலிக்கரை, கொல்லம், திருவனந்தபுரம் ஸ்டேஷனுக்கு மார்ச் 26 ஆம் தேதி இந்த ரயில் செல்லாது. பின்னர் மருமகமாக மார்ச் 26 ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு பதில் திருச்சூரில் இருந்து சென்னைக்கு 12624 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.