முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு பிப்ரவரி 20 வரை(இன்று ) விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்பிஏ மற்றும் எம்சிஏ பயில தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு தகுதி பெற வேண்டும்.

2023-24 ஆம் கல்வியாண்டு எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான டான்செட் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று நிறைவு பெறுகிறது. எனவே மாணவர்கள் இதனை தவறவிடாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.