மத்திய அரசு ஓய்வு காலத்தில் கணவன் மனைவி இருவரும் பயன்பெறுவதற்காக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானத்தை வழங்கும் வகையில் அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் ஓய்வூதியதாரர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமானவர் இந்த திட்டத்தின் மூலமாக பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை பயனர்கள் 60 வயதை பூர்த்தி அடைந்த பிறகு பெற முடியும். இந்த திட்டத்தை தனியார் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.