மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் அவர் மார்ச் 15ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகான அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.