தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இந்த பொது தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் தேர்வு நேர அச்சம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் 14416 என்ற உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு உளவியல் ஆலோசனைகளை பெறலாம். இதன் மூலமாக மாணவர்கள் தேர்வில் எந்தவித பிரச்சனையையும் இல்லாமல் தங்களது தேர்வுகளை எதிர்கொள்ள முடியும். இந்த அமைப்புக்கு நட்புடன் உங்களோடு மனநல சேவை என்ற தலைப்பின் கீழ் உதவி எண்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.