தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறும் பணி நாளையோடு நிறைவடைகிறது. மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியான பின் மே 30 முதல் ஜூன் 20 வரை கலந்தாய்வுகள் நடைபெறும். ஜூன் 22 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன.  மே-19 ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என்றும், www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.