தமிழகத்தில் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் இறந்தனர். தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க தூத்துக்குடி வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழகத்தில் இனிமேல் கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில் போன்ற விஷத்தை குடிக்க வேண்டாம்.

ஏனெனில் அருகில் எங்கு விஷ சாராயம் கிடைக்கிறது என்று பார்த்து குடித்தால் போதும் கஷ்டமும் தீர்ந்து விடும், வீட்டிற்கு 10 லட்சம் ரூபாய் பணமும் கிடைத்து விடும். டாஸ்மாக் விற்பனை பாதிக்கும் எனும் காரணத்தால் தமிழ்நாட்டில் கள் விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.