தேனி அருகில் உள்ள கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் பீட்டர்(56). இவருடைய மூத்தமகன் அருளானந்தம்(33) ஆவார். இவர்  ஆயுதப்படை காவலராக வேலை பார்த்து வருகிறார். இளையமகன் ஆரூண்(29) கோட்டூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண் மாற்று மதத்தைச் (இந்து) சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இதனால் ஜான் பீட்டர் குடும்பத்தினை ஒதுக்கி வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜான் பீட்டர் உடல் நிலை சரியில்லாததால் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலை அங்கு உள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என சொல்லி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர். மேலும் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.