விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “தமிழகத்தில் கள்ளச்சாராயம் இல்லை என்றால் ஒரே நாளில் 2000 பேர் கைது செய்யப்பட என்ன காரணம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.