பாஜகாவால் ஹிந்தி பேசும் மாநிலங்கள், அதாவது மாட்டு மூத்திர மாநிலங்களில் தான் வெல்ல முடியும் என திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செந்தில் குமாரின் இந்த பேச்சுக்கு பாஜகவின் பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள செந்தில் குமார், எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.