மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் பொதுமக்கள் நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கனமழையால் பாதிக்கப்படுவோர் தங்களுக்கு உள்ள பிரச்னைகள், தேவைப்படும் உதவிகளை தனது × பக்கத்தில் தெரிவிக்கலாம் என அமைச்சர் TRB ராஜா பதிவிட்டுள்ளார்.

போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர், பள்ளிக்கரணை பகுதிகளை சேர்ந்தவர்கள் உதவி கோரலாம் என்று கூறியுள்ளார். பல பகுதிகளில் மின்சாரம், பால், உணவின்றி தவிக்கும் மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளவும். உங்கள் பகுதியில் மின்சாரம் வந்துவிட்டதா