மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இதன் காரணமாக, தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் நேற்றும், இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்றும் மின்சார ரயில் சேவை கிடையாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வெள்ளம் முழுவதுமாக வடிந்தால் மட்டுமே மீண்டும் ரயில் சேவை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ரயில் இல்லாமல் பலரும் அவதியடைந்துள்ளனர்.