புயல் காரணமாக சென்னை முழுவதும் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஒரு நாள் மழைக்கே சிங்காரச் சென்னை சீரழிந்த சென்னையாக மாறி உள்ளது. போதிய மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகிறார்கள் என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.