நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நான்தான் முதலிடம் பிடித்தேன். விழா கமிட்டியின் முடிவை ஏற்க முடியாது என இரண்டாம் பரிசு பெற்ற வீரர் அபிசித்தர் புகாரளித்திருந்தார். இந்நிலையில் 2ஆம் இடம் பிடித்த அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது எனவும் விழாக்குழு முடிவின்படியே பரிசுகளை வழங்கியுள்ளோம் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் யாரையும் ஏற்ற இறக்கமாக பார்க்கவில்லை, அனைத்து வீரர்களும் எங்களுக்கு சமம் எனவும் தகுதியானவர்களுக்கே பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.