திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு 108 வைணவ தளங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து விட்டு அயோத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி ஸ்ரீரங்கத்திற்கு வருகை தர உள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.