தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணை எண் 243 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது ஒன்றிய கல்வி மாவட்ட அளவில் இருந்த பதவி உயர்வு என்பது இனி மாநில சீனியாரிட்டி அடிப்படையில் நடைபெறும். இதனால் பல ஆண்டுகள் காத்திருக்கும் சூழல் உருவாகும். தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற முடியாத சூழல் தற்போது உருவாகியுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.