மலைப்பகுதிகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை இன்று உதகையில் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டம் படிப்படியாக அனைத்து மலைப்பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் தற்போது மகளிர் கட்டணமில்லாமல் பயணித்து வருகின்றனர். இதனை விரிவு செய்யும் விதமாக மலைப் பகுதிகளிலும் கட்டணமில்லா பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது