திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி (92) நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள வனபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவரது மகனும் எம்பியுமான கலாநிதி வீராசாமி, “கீழே விழுந்ததில் அப்பாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் நலம் பெறுவார் என்று நம்புகிறோம்” என்றார். ஆற்காடு வீராசாமி ஏற்கெனவே உடல்நலக் குறைவால் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.