தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போக்குவரத்து கழகத்துக்கும் தனித்தனியான கட்டணம் இருந்த நிலையில் தற்போது அனைத்துக்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை முதல் ரூபாய் 30 வரை கட்டணம் உயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.