ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள லாடபுரம் கிராமத்தில் விவசாயியான கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் வேப்பமரத்தில் தழை பறிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தமிழ்ச்செல்வி கையில் இருந்த இரும்பு கம்பி மேலே சென்ற மின் ஒயர் மீது பட்டது.

இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தமிழ் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று தமிழ்செல்வியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.