விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வருகிற டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. எனவே வருகிற 28-ஆம் தேதி முதல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9080515682 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம் என கூறியுள்ளார்.