கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அம்பேத்கர் நகரில் பூ வியாபாரியான ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர்கள் ஸ்ரீநாத்தின் மூதாதையர்களின் சொத்தை விற்பனை செய்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீநாத் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீநாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.