கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு அய்யனாரின் பாட்டி அதே கிராமத்தில் வசிக்கும் 20 வயது பெண்ணிடம் எனது வீட்டில் புளியங்கொட்டை இருக்கிறது. அதனை அள்ளி செல் என கூறினார். அதன்படி பெண் புளியங்கொட்டை அள்ளி வருவதற்காக அங்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அய்யனார் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அய்யனாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் அய்யனாருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் உடல் நல குறைவால் ஏற்கனவே இறந்துவிட்டார் இதனால் அவரது தாய்க்கு தமிழக அரசு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.