மயிலாடுதுறையில் கடந்த ஒருவார காலமாக போக்கு காட்டும் சிறுத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2-2024 அன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மயிலாடுதுறை மாவட்டமானது மலை சார்ந்த பகுதியும் அல்ல.

அதுமட்டுமின்றி இம்மாவட்டத்தின் அருகில் கூட காடுகள் நிறைந்த மாவட்டம் என்பது கிடையாது. அப்படிப்பட்ட இந்த இடத்திற்கு சிறுத்தை எவ்வாறு வந்தது என வனத்துறையினர் குழம்பிப்போய் உள்ளனர். இந்நிலையில் அரவைக்காக நெல் ஏற்றி சென்ற ரயிலில் எரிய சிறுத்தை இங்கு இறங்கியிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.