உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் தன்னை நம்பி வந்த மனைவியை கழட்டி விட்டு ஆண் ஒருவர் ஓடினார். பலவபுரத்தில் உள்ள ஒரு நபர் தனது மகளுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் திருமணத்திற்கு முன்பு அந்த இளைஞர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் மனைவிக்கும் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டது. உடல்நிலை மோசம் அடைந்ததால் பெண்ணின் வீடு அருகே இறக்கிவிட்டு கணவர் ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.