ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்பாக இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசி உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் பெயரை மாற்றி காட்டுவேன் என பிரதமர் மோடி கூறியிருந்தால். தற்போது பெயர் பலகையை மாற்றியதன் மூலம் அவர் சொன்னதை செய்து விட்டார். இதற்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று உதயநிதி ஸ்டாலின் நாசுக்காக விமர்சித்துள்ளார்.