இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே சர்க்கரை நோய் உள்ளிட்ட நோயின் பரவல் அதிகரித்துள்.ளதாகவும் பரவும் முறைகளில் சில மாற்றங்கள் அடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர் அதாவது உலக அளவில் பாதிப்பை அதிக அளவில் ஏற்படுத்தும் உடல் வருமான, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களை ஆய்வு செய்ததில் பல்வேறு பரிணாமங்கள் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நோய்களால் இதயம் மற்றும் ரத்தக்குழாய் போன்ற உறுப்பு கோளாறுகள் அதிக அளவில் ஏற்படும் என்று மருத்துவ ஆராய்ச்சி கழக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற தொற்ற நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படியும் ஒவ்வொரு மண்டலங்களிலும் சுகாதார பராமரிப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்ததை விட தற்போது அதிக அளவில் தாக்கத்தை நீரிழிவு நோய் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருவதாக நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் டயாபட்டிக் ரிசர்ச் பவுண்டேஷன் தலைவர் தெரிவித்துள்ளார்.