சீனாவில் கார் ஓட்டுநருக்கும், மின்சார ஸ்கூட்டரில் வந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் ஓட்டியின் மீது தண்ணீரைத் தெறித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று சாலையோரம் இருந்த கல்லை எடுத்து காரின் முன் கண்ணாடியை சரமாரியாகத் தாக்கி உடைத்தார். இந்த வன்முறைச் சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இதைக் காட்டிலும் அந்த நபர் செய்த மற்றொரு செயல் இணையவாசிகளிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
<a href=”http://

“>

தனது ஸ்கூட்டரில் அழைத்து வந்த சிறுவனை, கார் ஓட்டுநர் தப்பிச் செல்லவிடாமல் தடுப்பதற்காக, காரின் முன்புறம் நிற்குமாறு அந்த நபர் கட்டாயப்படுத்தியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தச் சிறுவன் காரின் மிக அருகே நின்றுகொண்டிருக்க, அந்த நபர் ஆக்ரோஷமாகத் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

ஒரு தந்தையே தன் குழந்தையை வன்முறைக்கு கேடயமாகப் பயன்படுத்தியது மனிதாபிமானமற்ற செயல் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், சாலைக் கோபம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் சீன இணையத்தளங்களில் மீண்டும் சூடுபிடித்துள்ளன.