இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 12-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அந்நகரை விமானம் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மனிதம் மரணித்துவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார் CM ஸ்டாலின்.

இஸ்ரேல் போர் குறித்து x தளத்தில், ‘காசா பகுதியில் நடைபெறும் போர் உலக மக்களை பதைபதைக்க வைத்துள்ளது. குழந்தைகளின் அழுகுரலும், உணவின்றி தவிப்போரின் வேதனையும் இதயமுள்ள அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இந்த போரை நிறுத்த வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.