செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவr கண்டெடுக்கப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்திற்கு வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக சடலம் அங்கேயே இருக்கும் நிலையில், பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார் – ரயில்வே போலீசாருக்கு இடையே உள்ள எல்லை பிரச்னை காரணமாக சடலத்தை எடுப்பதில் தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது.