நடிகை நஸ்ரியா கணவர் பஹத் பாசில் வீட்டு பாத்ரூமிலிருந்து திடீரென்று சத்தமாக கத்தியுள்ளார். மேலும் பெட்ரூம் வந்தும் மோசமாக கத்தியுள்ளார். அப்போது பார்த்த நஸ்ரியா என்ன ஆச்சு உங்களுக்கு என்று விசாரித்துள்ளார். அப்போது தான் படத்தில் எந்த கேரக்டரில் நடிக்கிறாரோ அதே போல மாறிவிடுவாராம் பகத் பாசில். இதனையடுத்து நஸ்ரியா அவரிடம் நீங்கள் எந்த கேரக்டரில் நடித்தாலும் அதை சினிமாவோடு மறந்து விட வேண்டும்.

வீட்டிற்கு வந்த பிறகு அதையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. இல்லையென்றால் உங்களை மனநல மருத்துவரிடம் கொண்டு போய் விட்டு விடுவேன். மேலும் நீங்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று மீடியாவில் சொல்லி விடுவேன் என்று கூறியுள்ளார். அதிலிருந்து பகத் பாஸில் இது போன்ற செயல் செய்வதை நிறுத்திவிட்டதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.