சவுதி அரேபியாவின் மதீனாவில் உள்ள ஒரு முஸ்லிம் இளைஞர், இந்து சுவாமி பிரேமானந்த் மஹாராஜின் உடல் நலத்திற்காக தொழுகை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேமானந்த் மஹாராஜ் சமீபத்தில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால், அவரது ரசிகர்கள் பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சவுதி அரேபியாவின் மதீனா நகரில் உள்ள மஸ்ஜித் அந்நபவி மசூதியில் இந்த முஸ்லிம் இளைஞர் தொழுகை செய்து, சுவாமிஜியின் நலனுக்காக துஆ செய்தார். இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
प्रेमानंद बाबा के लिए मुस्लिम व्यक्ति ने मदीना में दुआ की।
प्रेमानंद बाबा सभी धर्मों के सम्मान की बात करते है इसलिए सभी धर्मों के लोग इनका सम्मान करते है।धीरेंद्र शास्त्री और सुरेश चव्हाणके दोनों देख लो। pic.twitter.com/xUu5JjrI0J
— अश्विनी सोनी (@Ramraajya) October 13, 2025
இந்த செயல் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலர் இதை மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயத்தின் உதாரணம் என்று பாராட்டி வருகின்றனர். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது போன்ற இத்தகைய நிகழ்வுகள் உலக அமைதிக்கு உதவும் என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ இதயங்களை வென்றுள்ளதாக பலர் கூறுகின்றனர்.
