மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதிய குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் ஊழியர்கள் அனைவருக்கும் அகல விலைப்படி உயர்வு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஐந்தாவது ஊதியக்குழு அடிப்படையில் தற்போது சம்பளம் பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டு பிரிவுகளின் படி அகலவிலை படி உயர்த்தப்பட்டது.

அடிப்படை சம்பளத்துடன் 50% அகலவிலைப்படி இணைக்காமல் இருக்கும் ஊழியர்களுக்கு 462 சதவீதத்தில் இருந்து 477 சதவீதமாக உயர்வு வழங்கப்பட்டது. அதே சமயம் அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீதம் அகலவிலைப்படி பெரும் ஊழியர்கள் 412 சதவீதத்திலிருந்து 427 சதவீ தம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆறாவது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 221 சதவீதத்திலிருந்து 230 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய அகல விலைப்படி உயர்வு 2023 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் அரசு தெரிவித்துள்ளது