இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இரண்டாம் கட்ட அகலவிலைப்படி உயர்வை எப்போது வரும் என்று ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகலவிலைப்படி தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனை தொடர்ந்து மூன்று சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தப்பட்ட மொத்தம் 45 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

தற்போதைய பண வீக்கத்துக்கு மத்தியில் அகலவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த மூன்று சதவீத உயர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவ்வாறு உயர்த்தப்பட்டால் ஊழியர்களுக்கு மாதம் 450 ரூபாய் கூடுதலாக கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.