இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்களது பணத்தை பாதுகாப்பான வங்கிகளில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். சில நேரங்களில் வங்கி கடனில் மூழ்கி வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதால் பணத்தை டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்களும் அச்சமடைகின்றனர். இப்படியான நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில பாதுகாப்பான வங்கிகள் குறித்த பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் அதனை தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற தனியார் வங்கிகள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அதனைப் போலவே பல வங்கிகளின் பெயர்கள் இந்த பட்டியலில் பெற்றுள்ள நிலையில் இந்த பட்டியில் உள்ள வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது.